அதிரை நாம் தமிழர்களை அதிருப்தி அடைய வைத்த தஞ்சை வேட்பாளர் ஹுமாயூனின் "ஷிர்க்" பேச்சு - கண்டித்த சீமான்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சியினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் தஞ்சாவூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக ஹுமாயூன் கபீர் அறிவிக்கப்பட்டு உள்ளார் இந்த நிலையில் இன்று இடும்பாவனத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். மேற்கண்ட தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிராம்பட்டினத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயுன் கபீர் ஷிர்கான சில வார்த்தைகளை பேசியதாகவும் இதனால் அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் அதிரை நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஹுமாயுன் பேசியவுடன் அதிரை நிர்வாகிகள் சீமானிடமே இது தொடர்பாக நேரில்முறையிட்டு தங்களின் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அதிரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் நம்மிடம் தெரிவிக்கையில், "ஹுமாயுன் கபீர் தன்னுடைய அறிமுக உரையில்
ஷிர்க்கான சில வார்த்தைகளை தெரிவித்தார். இது தொடர்பாக நேரடியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கட்சியின் அதிரையை சேர்ந்த நிர்வாகிகள் முறையிட்டனர். இதனை அடுத்து சீமான் ஹுமாயூன் கபீரை நேரடியாக அழைத்து கண்டனம் தெரிவித்தார்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...