அதிரை மக்களே உஷார்! சிறுவர்கள் விளையாடும் போலி 500 ரூபாய் நோட்டு கொடுத்து மோசடி

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
உண்மையான ரூபாய் நோட்டுகளை போல் சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் சிறுவர்கள் விளையாடுவதற்காக ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதேபோன்று மனோரஞ்சன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஃபுல் ஆப் பன் என்று குறிப்பிடப்பட்டு ரூபாய் நோட்டுகள் சிறுவர்கள் விளையாடுவதற்காக விற்கப்படுகின்றன. அச்சு அசலாக உண்மையான ரூபாய் நோட்டுக்களை போல் இருக்கும் இந்த விளையாட்டு பணம் தற்பொழுது மோசடிக்கு பயன்பட்டிருக்கிறது.

 மனோரஞ்சன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் ஃபுல் ஆப் ஃபன் என்று குறிப்பிடப்பட்ட ரூ 500 நோட்டை கொடுத்து கடைக்காரரை ஏமாற்றி இருக்கிறார்கள் மோசடி பேர்வழிகள். இமாம் ஷாபி பள்ளியின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விற்பனை ஸ்டால்களில் உள்ள ஒரு கடையில் இந்த 500 ரூபாய் நோட்டை கொடுத்து பணத்தை மாற்றி சென்று ஏமாற்றி இருக்கிறார்கள்.

பல முறை முயற்சித்து இந்த மோசடியை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதே போல் அதிரையின் மற்ற கடைகளிலும் இந்த மோசடிகாரர்கள் ஏமாற்ற முயற்சிக்கலாம். எனவே வியாபாரிகள் ரூபாய் நோட்டுக்களை நன்கு ஆராய்ந்து பெறுமாறு அறிவுறுத்துகிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...