அதிரையில் நாளை மின் தடையா.. உண்மை என்ன? அதிரை பிறையிடம் உதவி மின் பொறியாளர் விளக்கம்

Editorial
0
"மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் நவம்பருக்கான பருவகால பராமரிப்பு பணிகள் வருகின்ற நாளை 21-11-2023 காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருப்பதால் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர் காடந்தங்குடி, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்." என்ற செய்தி இன்று சில நாளிதழ்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அதிரை உதவி மின் பொறியாளரை தொடர்புகொண்டு அதிரை பிறை விசாரித்தது. அப்போது அவர் கூறுகையில், அதிரையில் நாளை மின் தடை என்ற தகவல் தவறானது. அதிரையில் 110 KV துணை மின் நிலையம் தொடங்கப்பட்டு உள்ளதால் மதுக்கூருடன் இனி மின் தடை இருக்காது. இந்த மாதத்தில் வேறொரு நாளில் மின் தடை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்." என்றார். 



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...