அதிரை மக்களுக்கு "ஷாக்".. நமதூரில் நிற்கும் ஒற்றை சென்னை ரயிலும் போச்சே!

Editorial
0
திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. மீட்டர் கேஜ் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணியும், திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட்டன.

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயண நேரம் தாமதமானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் தற்போது பயண நேரம் பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது நிறைவேற்றபடாத ஒன்றாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அதிரை வழியாக சென்னை செல்லும் செகந்திராபாத் வாரந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. இவ்வழியாக சென்னை எழும்பூர் செல்லும், அதிரையில் நின்று செல்லும் ஒரே ரயிலான இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், 2 அல்லது 3 வாரங்களுக்கு மட்டுமே நிறுத்தப்படுவதாகவும், இதை நிரந்தர சேவையாக்க முயற்சிப்பதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரி ரயில் பயணிகள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...