அதிரை மின் நிலையத்துக்கு "சபாஷ்".. நாளைய பவர் கட்டுக்கு இன்றே ஒத்திகை

Editorial
0
மதுக்கூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக  முன்னிட்டு நாளை (செப்டம்பர் 14 - வியாழன்) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை,  மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி மாதாந்திர மின் தடை செய்யப்பட்ட நிலையில், 21 நாட்களில் மீண்டும் பராமரிப்பு பணி என்று சொல்லி மின் தடை செய்வது எப்படி மாதாந்திர மின் தடையாகும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் நாளைய முழு நாள் மின் தடைக்கு இன்றே ஒத்திகை பார்ப்பதுபோல் பல பகுதிகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். 



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...