அதிரை மக்களை ஏமாற்றும் மின்சார வாரியம்.. ஒவ்வொரு மாசமும் இப்படியா செய்வீர்கள்?

Editorial
0
மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் ஜூலை மாதத்திற்க்கான பருவகால பராமரிப்பு பணிகள் வருகின்ற இன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருப்பதால் அதிராம்பட்டினம், மதுக்கூர், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர் காடந்தங்குடி, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.

சொன்னதை போன்றே காலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பில் இருந்ததைபோல் 5 மணிக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இந்த செய்தியை எழுதும்போது மணி 6. இன்னும் மின் இணைப்பு வரவில்லை. ஒவ்வொரு மாதமும் இதே நிலை தொடர்வதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சொன்ன நேரத்தில் மின் இணைப்பை துண்டிக்கும் மின் வாரியம் சொன்ன நேரத்தில் மின் இணைப்பை வழங்குவதில் என்ன பிரச்சனை? இந்த நேரம் போதாது என்றால் எதற்காக 5 மணி என்று அறிவித்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 



Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...