அதிரையில் நடைபெற்ற PFI-இன் "ரமலானை வரவேற்போம்" நிகழ்ச்சி

Editorial
0




பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக அதிராம்பட்டினம் நகரில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று 10.4.2021 மாலை 5:30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் உள்ள கதிஜா மஹால் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் ஜாவித் தலைமை தாங்கினார். 

சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் மற்றும் மாநில செயலாளர் A.அபூபக்கர் சித்திக் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M.முகம்மது சேக் அன்சாரி அவர்கள் ஆம்புலன்சை மக்களின் சேவைக்காக பொதுமக்கள் முன்னிலையில் அர்ப்பணித்தார்.



இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயலாளர் சம்சுதீன் நன்றி உரையாற்றினார். இதில் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர்.

இதில் எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா, தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகம்மது அஸ்கர், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் Er.N.மர்சூக் அஹமது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் Z.முகமது தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...