அதிரையில் 2 மாதங்களுக்கு பிறகு பேருந்தை பார்க்கும் மக்கள்...

Editorial
0
கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு உத்தரவும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஊரடங்கு உத்தரவு நிறைவடைந்த நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த தளர்வின் அடிப்படையில் தமிழகம் மண்டலவாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது. நமது மண்டலத்தை பொறுத்தவரை திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு இவற்றுக்குள் ஈ-பாஸ் இல்லாமல் சென்றுவர அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் இந்த மண்டலத்துக்குள் பயணிக்க 50% பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதிரையில் இன்று முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு அதிரை வந்த பேருந்துகளை மக்கள் ஆவலுடன் பார்த்தனர். பேருந்து ஓட்டுநர், நடத்துனர் முகக்கவசம் அணிந்துள்ளனர். பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...