அதிரையை சேர்ந்த மேலும் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

Editorial
0
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவையாறு, திருவோணம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், அம்மாபேட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 57 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்களில் நேற்று வரை 35-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நேற்று அதிராம்பட்டினத்தை சேர்ந்த மேலும் 2 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிரையை சேர்ந்த மேலும் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். குணமடைந்து வீடு திரும்பு நபர்கள் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...