எல்லை மீறும் விமர்சனங்கள்... யார் இந்த தலைமை காஜி சலாஹூத்தீன் அய்யூப்?

Editorial
1
தமிழகத்தில் ரமலான், நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் பிறை முடிவுகள் காஜியால் தான் எடுக்கப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு நோன்பு, பெருநாள் நேரத்தின் போதும் இவரது அறிவிப்புகள் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது. தலைமை காஜி தரப்பிலும், ஜமாத்துல் உலமா சபை தரப்பிலும் நபி வழிகாட்டிய முறையில் தான் பிறை அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் வைத்து தலைமை காஜியை விமர்சிக்கும் போக்கு நடக்கிறது.

எது எப்படி இருந்தாலும் தலைமை காஜியின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் எல்லை மீறிச் செல்வதை காண முடிகிறது. அவரது வயதையும் அவரது மார்க்க அறிவையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக பேசி வருவதை ஏற்க முடியாது.

அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாயத் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது. 

இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப்பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி போல்). அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்பத்த பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். M.A., M.Phil படித்துவிட்டு ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் Phd பெற்றவர். நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப்பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும், இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது, பார்சி, அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன், மார்க்க, வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.
தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்கள் கூறும் வகையில், அவர் மிகவும் எளிமையானவர் என்றும் மக்களால் எளிதில் அணுகப்படக்கூடியவர் என்கிறார்கள். யாருடைய எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர் என்கிறார்கள். அரசு வழங்கிய சைரன் வைத்த கார், அரசு ஒதுக்கிய வீடு, அரசு வழங்கும் ஊதியம், அரசு வழங்கிய தலைமை அலுவலகம் என தனது பொறுப்புக்காக அரசு வழங்கும் எதையும் பெறாதவர் தலைமை காஜி. 

பதிவு: மன்பயீ ஆலிம்
தகவல்: காயல் ஜெஸ்முதீன்

குறிப்பு: தலைமைக் காஜியின் நிலைபாட்டை நியாயப்படுத்துவதோ அல்லது விமர்சிப்பதோ அதிரை பிறையின் நோக்கம் அல்ல. ஆனால், அவரை பற்றி எதுவும் அறியாமல் பலர் விமர்சித்து வருகின்றனர். எனவே அவர் குறித்த தகவலை பகிர்கிறோம்.

Post a Comment

1Comments
  1. யார் இந்த தலைமை காஜி என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள பல செய்திகள் உண்மையாக இருக்கலாம் ஆனால் மார்க்க சம்மந்தமான விஷயத்தில் அவர் செய்யும் செயல்கள் பல இனைவைப்புக்குறியதாகவே இருக்கின்றது.
    சென்னையை சுற்றி இருக்கும் தர்காக்களில் மார்க்கத்திற்கு முரணாகவும் அனாச்சாரங்களுமாக ந டை பெறும் பெறும்பாலான கந்தூரி (திருவிழா)விழாக்களை பாத்திஹா ஓதி துவக்கி வைப்பவர் இவராகத்தான் இருக்கின்றார்.அதுமட்டுமல்லாது சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில் ஈத்கா பள்ளி அருகில் ஒரு சந்து முனையில் முஹைதீன் ஆண்டவர் நினைவு தூன் என்ற பெயரில் தூண்கள் வடிவில் கட்டப்பட்டிருக்கும் அதற்கு வருடா வருடம் பெயிண்ட் அடித்து பூமாலைகள் கட்டி ஊது பத்திகள் கொலுத்தி வெகு விமர்ஷையாக விழா எடுப்பார்கள் அந் விழாவிற்கு தலைமையேற்று ஃபாத்திஹா ஓதி பூஜையினை பெரும்பாலும் இவர்தான் செய்வார்.வெகு விமரிசையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தங்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டமும் தங்களை ஆலிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிலரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.
    தானும் இனைவைத்து மக்களையும் இனைவைப்பிற்கு அழைத்து செல்லும் இவர்தான் தலைமை காஜி.

    (குறிப்பு:இதன் உண்மை தன்மைகளை சென்னை ஈத்கா பள்ளி முஹல்லா வாசிகளிடம் விசாரித்து அறிந்து கொள்ளலாம்)

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...