துபாய் கிரிக்கெட் தொடர் - சிறந்த பேட்ஸ்மேன், மதிப்பிற்குறிய வீரர் விருது பெற்ற அதிரையர்

Editorial
0


துபாயில் DFCC கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் - நோ ஃபியர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நோ பியர் அணி 16 ஓவர்களில் அதிரடியாக ஆடி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது.

அடுத்து களமிறங்கிய அதிரை பாய்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனாலும், அந்த அணியை சேர்ந்த சமீமுத்தீன் அவர்களின் அதிரடி ஆட்டம் அனைவருக்கும் விருந்தாக அமைந்தது. 34 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 5 பவுண்டரிகள், 7 சிக்சர்களை விளாசி 74 ரன்களை குவித்தார்.

இந்த தொடரில் 8 போட்டிகளில் 379 ரன்களை விளாசியுள்ள அதிரை சமீமுத்தீன் 75.80 சராசரி மற்றும் 261.38 ஸ்டிரைக் ரேட்டுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவருக்கு சிறந்த பேட்ஸ்மேனுக்கான கோப்பையும், மதிப்புமிக்க வீரருக்கான கோப்பையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.








Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...