அதிரையில் அதிநவீன ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Editorial
0
தஞ்சை, திருவாரூர் கிழக்கு கடற்கரையோரத்தில் மிக முக்கியமான ஊராக அதிராம்பட்டினம் உள்ளது. வணிகம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற பல முக்கிய காரணங்களுக்காக அதிராம்பட்டினத்துக்கு வெளியூர்களில் இருந்து மக்கள் நாள்தோறும் வருகை தருகிறார்கள். அதிக மக்கள் தொகை, பரப்பளவு, அதிக வீடுகளை உள்ளடக்கிய நமதூரில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை உள்ளது.

108 ஆம்புலன்ஸ் பட்டுக்கோட்டையில் இருந்து வர வேண்டும் என்பதால் உடனடியாக அழைத்து செல்ல ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. தற்போது நிலவும் மருத்துவ அவசர நிலை காலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் போதுமானதாக இல்லை.

எனவே, அதிரை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் வாங்க முடிவு செய்துள்ளோம். ஆம்புலன்சிலேயே முதலுதவி, ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளை ஏற்படுத்தி முடிந்தவரை உடனடி சிகிச்சை கிடைக்க நம்மால் முடிந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

அதற்கு உங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணியில் இணைந்திடுமாறு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிராம்பட்டினம் கிளை நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...