தஞ்சாவூரில் முதல்முறையாக இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியது

Editorial
0
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இருந்த பாதிப்பு மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், தஞ்சை மாவட்டத்தில் கடந்த மாதம் கட்டுக்குள் இருந்த பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரே நாளில் 209 பேருக்கு தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.. இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 2366-ஆக அதிகரித்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 20 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் 1346 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1000 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால் தேவையற்ற கூட்டங்களை தவிர்த்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகலை கடைப்பிடித்து உயிர்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...